districts

மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு பாதுகாப்பு இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை

கும்பகோணம், அக்.13 கும்பகோணம் மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர் கள் கூட்டம் பழைய மாநக ராட்சி அலுவலக படேல் மன்  றத்தில் மேயர் சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற் றும் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னி லையிலும்  நடைபெற்றது. கூட்டத்தில், மாமன்ற  உறுப்பினர்கள் எழுப்பிய  கேள்விகளின் அடிப்படை யில், கும்பகோணம் மாநக ராட்சிக்குட்பட்ட தாராசுரம் பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகள் அனைத்தும் தீபா வளி பண்டிகைக்கு பிறகு  முழுமையாக அகற்றவும், கும்பகோணம் புதிய  பேருந்து நிலைய வளா கத்தில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு பாதுகாப்பு இல்லங்  களில் சேர்க்க சமூகநலத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும், தீபாவளி பண்டிகை மக்கள் கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு மாநக ரில் பல்வேறு இடங்களில் உள்ள பொது கழிவறை களை சுத்தம் செய்து முழு மையாக முறையாக பரா மரித்து உடன் செயல்பாட் டிற்கு கொண்டு வரவும்,  இம்மாத இறுதியில் தொடங்கும் மழை காலத் தில், மாநகரில் தெருக்களில் கழிவு நீர் வழிந்தோடி, சுகா தார சீர்கேடு ஏற்படாமல் தடுக் கும் வகையில் அடைப்பு களை உடனுக்குடன் போர் கால அடிப்படையில் சீர மைத்து கும்பகோணம் மாந கரில் தொடர்ந்து தூய்மை, சுகாதாரத்தை பேணி காத்து மேம்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.