தஞ்சாவூர், டிச.21- தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளு நர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. காலியாக உள்ள 1350-க்கும் மேற் பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய அரசாணை வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். மருந்தாளுநர்களுக்கு இயக்கு நரகத்துக்கு உள்ளேயும், இயக்குநர கத்துக்கு இடையிலும் பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந் தாய்வு நடத்திட வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உரு வாக்கிட வேண்டும். இயக்குநர் அலுவல கங்களில் துணை இயக்குநர் மருந்தியல் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தப் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில், மாநிலப் பொருளாளர் ஹேம லதா, மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட பொரு ளாளர் ரமேஷ் மற்றும் முன்னணி மருந்தா ளுநர்கள் கலந்து கொண்டனர்.