சேதுபாவாசத்திரம், ஜன.18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி தாலுகா சேதுபாவாசத்திரம் மணக்காடு ஊராட்சி, நெல்லி யடிக்காடு கிராமத்தில், 50 ஆண்டு களுக்கும் மேலாக மின்சார வசதி இல்லாமல், சுமார் 50க்கும் மேற பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இவர்கள் தங்களுக்கு மின் இணைப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், கடந்த மாதம் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் முன்பு நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில், மின் இணைப்பு வழங்குவதற்கு வாக்குறுதி அளிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின் இணைப்புக்காக மனு அளித்தும், மின் இணைப்புக்கான வைப்புத் தொகையாக மின்சார வாரியத் திற்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் செலுத்திய பின்பும், மின் வசதி செய்து தர மறுக்கும் மின்சார வாரிய அலுவலகத்தைக் கண்டித்து பெரு மகளூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு புதன்கிழமை பொதுமக்கள் உண்டு, உறங்கி, குடியமரும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சேகர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெரு மாள், விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் வீ. கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கண்டன உரை யாற்றினார். இதில், சேதுபாவாசத்திரம் மாவட்டக்குழு உறுப்பினர் எம். இந்துமதி, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், பேராவூரணி சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் (பொ) வே.ரெங்க சாமி, பேராவூரணி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள், நெல்லியடிக்காடு பொது மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இந்நிலையில், பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் மற்றும் மின் வாரிய உதவி செயற்பொறியாளர், பெருமகளூர் வருவாய் ஆய்வா ளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் போராட்டம் நடைபெற்ற இடத்தில், சிபிஎம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என அதி காரிகள் உறுதி அளித்தனர். இதை யடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.