தஞ்சாவூர், நவ.24- தஞ்சாவூர் அருகே கூடு தல் நேரம் பேருந்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் வியாழனன்று சாலை மறி யலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலி ருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நகரப் பேருந்து காலை 6:30, 7:30, 11:30, 3:30, 5:30, 7:30, 8:30 ஆகிய 7 முறை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது காலை, மாலை என இரு நேரங்கள் மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. இத னால், வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள் ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாம லும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவ திப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராம மக் கள் பல முறை அதிகாரிகளி டம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், திருவையாறு புறவழிச்சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, போக்கு வரத்துக்கழக தஞ்சாவூர் கோட்ட மேலாளர் செந்தில் குமார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த னர். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.