கும்பகோணம், டிச.29- கோயில், மடம் நிலங்களுக்கான வாடகையை குறைக்கக் கோரி கும்பகோணம் இந்து சமய அறநிலை யத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாராசுரம் எஸ்.வி.மணி தலைமை வகித்தார். என்.செல்வம், ஆர்.பாபு, க.பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சா.ஜீவ பாரதி, மாவட்டப் பொருளாளர் கொளஞ்சிநாதன், திருப்பா னந்தாள் சாமிக்கண்ணு ஆகியோர் விளக்கிப் பேசினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை சித்தர்காடு இந்துசமய அறநிலைய இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் த. இராயர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சாமி.நட ராஜன் விளக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன், மாநிலக்குழு உறுப்பினர் குணசுந்தரி, மாவட்டப் பொருளாளர் எம்.செல்லப்பா, கணேசன் தலைவர், அமை யாம்பாள்புரம் குடியிருப்போர் நல சங்க தலைவர் டி.கணே சன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கொரோனா பெரும் தொற்று காலம் முழுவதற்குமான அடிமனை வாடகையை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். 2016 ஆம் ஆண்டு முதல் 34 ஏ அடிப்படையில் பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்திட வேண்டும். அரசாணை எண் 456/207, 2007 298/ 2010 அடிப்படையில் வாடகை நிர்ணயிக்க வேண்டும். புதிய வாடகை நிர்ணயிக்க தலைமைச் செயலாளர் தலை மையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரை களை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூர்
திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள இந்து அறநிலை யத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் துரைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ் பேசினார். விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டப் பொருளாளர் முத்து கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் கே.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.