தஞ்சாவூர், நவ.21- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் நீல கண்ட பிள்ளையார் கோவி லின், குழுக் கோவிலான பழைய பேராவூரணி பிர சன்ன வெங்கடேசபெருமாள், செங்கமங்கலம் தெய்வாங் கப் பெருமாள், மார்க்கண் டேஸ்வரர் ஆகிய மூன்று கோவில்களுக்கும் சொந்த மான ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அற நிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பேராவூரணி-2 பிட் கிராமத்தில் 89 செண்ட் புன்செய் நிலமும், செங்கமங் கலம் தெய்வாங்கப் பெரு மாள் கோவிலுக்கு சொந்த மான செங்கமங்கலம் கிரா மத்தில் உள்ள 4ஏக்கர் 53 செண்ட் புன்செய் நிலமும், செங்கமங்கலம் மார்க்கண் டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மாவடுகுறிச்சி மேற்கு கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் 42 செண்ட் நஞ்சை நிலமும் என மொத்தம் 8 ஏக் கர் 84 செண்ட் பல ஆண்டு களாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதுகுறித்து, உயர் அதி காரிகள் ஆலோசனைப் படி, தஞ்சாவூர் இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் நாகையா, இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் சங்கர், நில அளவையர் ரெங்கராஜன், பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னி லையில், நீலகண்ட பிள்ளை யார் கோவில் செயல் அலு வலர் ரவிச்சந்திரன் ஆக்கிர மிப்புதாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் தீர்வு காணப்பட்டு, ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து கோயில் நிலம் மீட் கப்பட்டு அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டது.