தஞ்சாவூர், ஜூலை 31- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் பட்டுக்கோட்டை ஒன்றிய மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் மோரீஸ் அண்ணாதுரை தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் து.ராஜதுரை வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா மாநாட்டை துவக்கி வைத்துப் பேசி னர். ஒன்றியச் செயலாளர் எஸ்.சுந்தர பாண்டியன் வேலையறிக்கையை முன் மொழிந்தார். மாநாட்டை வாழ்த்தி தமுஎகச ஒன்றியத் தலைவர் முருக.சர வணன், முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகி ஞானசூரியன் ஆகியோர் பேசி னார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பா.லெனின் நிறைவுரையாற்றினார். ஒன்றியப் பொருளாளர் வீ.சாமிநாதன் நன்றி கூறினார். மாநாட்டில் 11 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக எஸ்.சுந்தரபாண்டியன், செயலாளராக து.ராஜதுரை, பொரு ளாளராக டி.தமிழ்சுரேஷ், துணைத் தலைவராக ரெ.சத்யா, துணைச் செய லாளராக எஸ்.மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை முதல் தஞ்சாவூர் வரை புதிய ரயில் பாதை அமைத்து ரயில் போக்குவரத்து சேவையை துவங்கிட வேண்டும். பட்டுக்கோட்டை அறந்தாங்கி முக்கம் - பண்ணவயல் சாலையில் பெண்கள், பள்ளி மாணவி கள் மற்றும் பொதுப் போக்கு வரத்துக்கு இடையூறாக இருக்கிற மது பானக் கடை எண்: 7855 மற்றும் முடி பூண்டார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபான கடை எண்:7858 ஆகிய இரு கடைகளையும் உடனடியாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்திட வேண்டும். பட்டுக் கோட்டை தாலுகாவில் குடிமனை பட்டா இன்றி வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் இலவச குடிமனைப் பட்டா வழங்கிட வேண்டும். பட்டுக்கோட் டைக்கு புதிதாக பேருந்து நிலையம் கட்ட, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை துவங்கிட வேண்டும். பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள நியாயவிலைக் கடைகளில், மண்ணெண்ணெய் பெற தகுதி உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் தட்டுப்பாடின்றி மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். பத்தாங்காடு கிரா மத்தில் புதிதாக பகுதி நேர நியாய விலை கடை திறக்க வேண்டும். தஞ்சா வூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.