தஞ்சாவூர், மே 30 - திங்கள்கிழமை திருவையாறு வந்த டைந்த காவிரி நீரை, மேளதாளம் முழங்க மலர்கள் தூவி பொதுமக்கள் வணங்கி வரவேற்றனர். காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக, வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, நடப்பாண்டில் முன்கூட்டியே கடந்த மே 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து மே 27 ஆம் தேதி மாலை கல்லணை யில் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர், திங்களன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வந்தடைந்தது. அப்போது, திருமஞ்சணவீதி படித்துறை யில் பெண்கள், சிறுவர்கள், பொது மக்கள் மேள தாளம் முழங்க காவிரி நீரை வரவேற்றனர். பின் காவிரி நீருக்கு கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து, மலர்கள் தூவி வழிபாடு செய்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியும் வழிபட்டனர்.