districts

img

தீயில் கருகி பெண் உயிரிழப்பு  கணவர் கைது கோரி போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 14-  தஞ்சாவூர் அருகே தீயில் கருகி இளம்பெண் உயிரிழந்ததால், கண வர் குடும்பத்தினரை கைது செய்யக்  கோரி பெண்ணின் உறவினர்கள்  உடலை வாங்காமல் செவ்வாய்க் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்  காட்டுப்பள்ளி அருகே அகரப்  பேட்டையைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் ராஜ்மோகன் (26). மயிலாடுதுறை மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகள் குணசீலா (24). இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ராஜ்மோகன்-குணசீலா தம்பதியினர் மயிலாடு துறையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்த னர். இவர்களுக்கு ஒன்பது மாத பெண் குழந்தை ரக்சிதா உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்மோகன் தனது சொந்த ஊரான அகரப்பேட்டைக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 7-ஆம் தேதி இரவு குண சீலா தீக்காயமடைந்து விட்டதாக கூறி, தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் கணவர் குடும்பத்தின ரால் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மார்ச்  12-ஆம் தேதி இரவு இறந்தார். குணசீலாவை அடித்து, துன்புறுத்தி வரதட்சணை வாங்கி வருமாறும், அவரை மண்ணெண்ணை ஊற்றி தீ  வைத்து கொளுத்தியதால் தான் அவர் இறந்துவிட்டார். அவரது கணவர் ராஜ்மோகன், அவரது அண்ணன் ராஜேஷ், தாய் சிவகாமி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தால்  தான் உடலை பெற்றுக் கொள்வோம் என பெண்ணின் உற வினர்கள் கூறிவிட்டனர். தொடர்ந்து தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முன்பு பெண்ணின் உற வினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.  இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்ட  ஆட்சியரைச் சந்தித்து முறையிட  குணசீலாவின் உறவி னர்கள் ஒரு வேனில் புறப்பட்டுச் சென்றனர்.  காவல்துறை யினர் அவர்களது வேனை நடுவழியில் நிறுத்தி, வேனில்  இருந்த 30 பேரைக்  கைது செய்து வல்லத்தில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.