தஞ்சாவூர், ஜூன் 25 - தென்னை விவசாயி களை பாதுகாக்க வேண்டும். உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தென்னை உற்பத்தி யாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகே தேங்காய் உடைப்பு போராட்டம் சனிக் கிழமை நடைபெற்றது. வழக்கறிஞர் ஆர்.ராம சாமி, எஸ்.கந்தசாமி, பா.பால சுந்தரம், சோ.பாஸ்கர் ஆகி யோர் தலைமையில் நடை பெற்ற, இந்த ஆர்ப்பாட்டத் தில் மாநில தலைவர் சி.கிருஷ்ண மூர்த்தி, மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மாநிலப் பொருளாளர் சோ. பழனிவேல், தென்னை உற்பத்தியாளர் விற்பனை யாளர் சங்க தலைவர் வி.பி.டி. பாலசுப்ரமணியன், பொரு ளாளர் எஸ்.செல்வராஜ், பேரா டி.லெனின், சி.பக்கிரி சாமி, வீரமோகன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.செல்வம் உட்பட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அறந்தாங்கி முக்கம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, சுமார் 2 கி.மீட்டர் தூரம் விவசாயி கள் ஊர்வலமாக சென்று தேங்காய் உடைப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “கொப்ப ரைத் தேங்காய் கொள்முதல் நிலையங்களை உடனடி யாக திறக்க வேண்டும்.
கொள்முதல் நிலையங்களி லேயே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். பாமாயில் இறக்குமதியை நிறுத்தி, கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங் காய் எண்ணெய் வழங்க வேண்டும். தேங்காய் பிண்ணாக்கு என்ற பெயரில் இறக்குமதி யாகும் எண்ணெய் கொப்பரை மீதான இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும். பட்டுக் கோட்டையை மையமாக கொண்டு, தென்னை சார் பொருட்களை மூலதன மாகக் கொண்ட தொழிற் சாலை தொடங்க வேண்டும். வறட்சி மற்றும் நோய் தாக்கு தல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மரங்களுக்கு தலா ரூ.2,500 வழங்க வேண்டும். அங்கன் வாடி மற்றும் சத்துணவு மையங்களில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். தேங்காய் பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான ஊட்டச் சத்து நிறைந்திருப்ப தால் அரசே நேரடியாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.