districts

img

குடியிருப்புகளை அகற்றுவதற்கு உத்தரவிட்டதை திரும்பப் பெற கோரி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேலக்காவேரி மூப்பகோயில் பகுதி பாபு செட்டிகுளம் அருகில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் குடியிருப்புகளை வருவாய்த் துறை நிர்வாகம் அகற்றுவதற்கு உத்தரவிட்டதை திரும்பப் பெற வேண்டும். குடியிருப்போருக்கு வகை மாற்றி பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகர குழு சார்பில் மாநகரச் செயலாளர் செந்தில்குமார். மாநகர குழு உறுப்பினர்கள் பழ.அன்புமணி, எம்.கண்ணன் மற்றும் குடியிருப்போர் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.