districts

ஒரத்தநாடு: பூவத்தூர் அரசுப் பள்ளிக்கு வேன் வழங்கிய கிராமத்தினர்

தஞ்சாவூர், டிச.21-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பூவத்தூர், பேய்க்கரம்பன்கோட்டை, பாளமுத்தூர், குடிக்காடு, தெலுங்கன்குடிக்காடு, திரு மங்கலக்கோட்டை, மேலையூர், கக்கரை ஆகிய கிராம  பகுதியைச் சேர்ந்த 190 மாணவர்கள் படித்து வருகின்ற னர். மேலும், ஊராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் ஆங்கில மழலையர் பள்ளியில் 185 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்கு, பூவை  கல்வி வளர்ச்சி குழு மற்றும் பொதுநல அறக்கட்டளை என்ற பெயரில், பூவத்தூர் கிராம இளைஞர்கள், மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாண வர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கல்வித் துறை, ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.  மேலும், பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம், மாண வர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என கிராம  மக்கள், பூவை கல்வி வளர்ச்சி குழு மற்றும் பொதுநல  அறக்கட்டளை சார்பில் ரூ.13 லட்சம் செலவில், பள்ளி  பெயரில் வேன் ஒன்றை வாங்கி திங்கள்கிழமை பள்ளிக்கு வழங்கினர். இவ்விழாவில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவக்குமார், மாவட்ட கல்வி அலு வலர் எம்.கோவிந்தராஜ் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வன் (தொடக்க நிலை), உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஹேமலதா, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் லாசரஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து பூவை கல்வி வளர்ச்சி குழுவினர் கூறுகையில், எங்கள் பள்ளி வளர்ச்சிக்காக கிராம மக்கள், இளைஞர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை யை அதிகரிக்க ஆங்கில வழியில் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளை தொடங்கினோம். மேலும், எட்டு ஆசி ரியர்களை குழுவினர் மூலம் நியமித்துள்ளோம்.  இதனால் கடந்த சில ஆண்டாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் தொலை வில் உள்ள கிராமத்தில் இருந்து வரும் மாணவர் களின் வசதிக்காக, பள்ளி பெயரில் வேன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளோம். வேன் பராமரிப்பு, இதர  செலவுகளையும் குழு மூலம் வழங்குகிறோம். வேன்  மூலம் நாளொன்றுக்கு சுமார் 180 மாணவ, மாணவி களை அழைத்து வர முடியும். இதன் மூலம், உரிய நேரத்தில் பள்ளிக்கு மாணவர்கள் வர வசதியாக அமையும், சேர்க்கையும் அதிகரிக்கும்” என்றனர்.