districts

img

புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர், நவ.2 - திருவையாறு அருகே புறவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் கருப்புக் கொடி யுடன் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.   தஞ்சாவூர் மாவட்டம், திருவை யாறில் போக்குவரத்து நெரிசல் இருப்ப தால் புறவழிச்சாலை அமைக்க பொது மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இதையடுத்து புறவழிச்சாலை அமைக்க திருவையாறு, கண்டியூர், மணக்கரம்பை, கீழத்திருப்பந்துருத்தி, கல்யாணபுரம் உள்ளிட்ட ஊர்களில் 100 ஏக்கர் விவசாய நிலங்களை கைய கப்படுத்தும் பணிகளுக்கான அளவீடு கள் செய்யப்பட்டன. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் கண்டனம் தெரி வித்து பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். மேலும், முப்போகம் விளை யும் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், புதன்கிழமை காட்டுக்கோட்டையில் நடவு செய்யப் பட்டிருந்த வயலில், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் எனக் கூறி நெடுஞ்சாலைத் துறையினர் பயிர்களை அழிக்க முயன்றுள்ளனர். இதைய றிந்த விவசாயிகள், பெண்கள் பொக் லைன் இயந்திரத்தை மறித்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட் டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த, திருவையாறு வட்  டாட்சியர் பழனியப்பன் போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையேற்று விவ சாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், “திருவையாறு சாலையில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி களை செய்யாமல், விளைநிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், முறையான அளவீடு செய்யாமலும்,  உரிய இழப்பீடும் அறிவிக்காமல் பணி களில் அரசு ஈடுபடுகிறது. நீதிமன்றம் இதற்கு தீர்வு காண வேண்டும்” என்ற னர்.