தஞ்சாவூர், ஜன.22- தஞ்சாவூர் மாவட்டத்தில், நர்சரி பண்ணை வைத்திருப்பவர்கள் விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் முனைவர் விநாயக மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்களில் தென்னங் கன்றுகள், காய்கறி நாற்றுகள், பழச் செடிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தி யாளர்கள் மற்றும் இவற்றை கொள்முதல் செய்து விவசாயி களுக்கு விற்பனை செய்யும் நர்சரி உரி மையாளர்கள், கட்டாயம் விதை விற்ப னை உரிமம் பெற்றே விற்பனையை மேற்கொள்ள வேண்டும். இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில், விண்ணப்பித்த 41 நாற்றுப்பண்ணை உரிமையாளர்களுக்கு விதை கட்டுப் பாட்டு ஆணை 1983-ன் கீழ் 5 ஆண்டு களுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய விதை விற்பனை உரிமங்கள் வழங்கப் பட்டுள்ளன. தென்னங்கன்றுகள், நாற்றுகள் மற்றும் விதை கொள்முதல் விபரங்களை, விதை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு, நாற்றுகளை விற்பனை செய்யும் போது, பயிர், ரகம், நாற்றங்கால் எண்ணிக்கை, விற்பனை விலை ஆகிய விபரங்களுடன் விவசாயிகளின் கை யொப்பத்துடன் ரசீது வழங்க வேண்டும். பழச்செடிகள் மற்றும் தென்னங் கன்றுகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும் போது, அவற்றின் ரகம், விலை குறிப் பிட்டு ரசீது வழங்கி இருப்பு பதிவேட் டில் பதிவு செய்ய வேண்டும். நர்சரி நிலையம் முன்பு, நர்சரியின் பெயர் பல கையும், நாற்றுகள் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அடங்கிய இருப்பு பலகையையும் முழு விவரங்களுடன் வைக்க வேண்டும். விதைச் சட்ட விதி களை பின்பற்றாமல், விதிகளை மீறி விற்பனை செய்யும் விதை விற்பனையா ளர்கள் மீது விதை சட்ட விதிகள் 1966 மற்றும் விதை விதிகள், 1968 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும். தென்னங்கன்றுகள் மற்றும் நாற்று களை விவசாயிகளுக்கு விற்பனை மேற் கொள்ள புதிய உரிமம் பெற விரும்புப வர்கள், தஞ்சாவூர் காட்டுத் தோட்டத் தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விதை வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவல கத்தில் உரிய ஆவணங்களுடன் விண் ணப்பத்தை சமர்ப்பித்து புதிய உரிமம் பெற்றுக் கொள்ளலாம்” என தெரி விக்கப்பட்டுள்ளது.