தஞ்சாவூர், நவ.24- கள்ளக்குறிச்சி தனி யார் பள்ளி மாணவி வழக்கு விசாரணையை விரைவு படுத்த வேண்டும். போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்ற வாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண் டும், உரிய நிவாரணம், குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவி மர ணத்திற்கு நீதி கேட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென் னையில் டிஜிபி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத் தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், போராட் டத்தில் கலந்து கொள்ள இருந்த மாதர் சங்க நிர்வாகி கள் பலரையும் காவல்துறை யினர் பேருந்துகளை வழி மறித்தும், வீடுகளில் சென் றும் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட் டவர்களை எங்கு கொண்டு செல்கிறோம் எனவும் காவல் துறையினர் உரிய தகவல் தர வில்லை. எனவே, இதனைக் கண் டித்து மாதர் சங்க தஞ்சாவூர் மாவட்டக்குழு சார்பில் தஞ் சாவூர் ரயிலடியில் சாலை மறி யல் போராட்டம் நடைபெற் றது. இதில் பங்கேற்ற மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் இ. வசந்தி, மாவட்ட நிர்வாகிகள் எம்.மாலதி, டி.வசந்தி, பைந் தமிழ், ஒன்றியச் செயலாளர் வனரோஜா உள்ளிட்ட 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.