தஞ்சாவூர், ஜன.23- ஊரக வேலைத் திட்டத்தில் ஆதார் இணைப்பை காரணம் காட்டி, 11 கோடி தொழிலாளர்களின் வேலையை பறிக்கும் மோடி அரசை கண்டித்து மகாத்மா நினைவு நாளில் (ஜன.30) ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு நூதனப் போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோ சனை கூட்டம் தஞ்சாவூரில் நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலா ளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் அ.பழனிசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனைக்கான முறையை உடனே திரும்பப் பெற வேண்டும். அட்டைப் பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நிறுத்தப் பட்டுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை தொடங்க வேண்டும். சம்பள பாக்கியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.
ஊரக வேலை சட்டத்தை திருத்துவதை கைவிட வேண்டும், வேலை நாட்களை 200 நாட்களாக வும், தினக்கூலி 600 ரூபாயாகவும் உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.30 அன்று மாநிலம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
தமிழ்நாட்டில் இந்த புதிய அறிவிப்பால் சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, ஒன்றிய பாஜக அரசின் ஏழைகள் விரோத தொடர் நடவடிக் கையைக் கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் ஊரக வேலை திட்ட பயனாளிகள் பங்கேற்குமாறு அறைகூவல் விடுக்கப் பட்டது.