தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அறிவி யல் கழகம் சார்பில், தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, கல்லூரி யின் முதல்வர் முனைவர் பா. சிந்தியா செல்வி தலைமை வகித்தார். அறிவியல் கழகத் தலைவரும், தமிழ்நாடு அறி வியல் இயக்க மாநில துணைத் தலைவருமான முனைவர் வெ.சுகுமாறன், இயற்பியல் துறை தலைவர் முனைவர் அனுராதா, திறந்தவெளி பல் கலைக்கழக ஒருங்கிணைப் பாளர் முனைவர் கார்குழலி, இளம் அரிமா சங்க ஒருங்கி ணைப்பாளர் முனைவர். ஜெயக்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், தஞ்சாவூர் ஒன்றியம் புதுமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறி வியல் இயக்க மாவட்டச் செயலாளர் லெ.முருகன், அறிவியல் அறிஞர்கள் சர் சி.வி.ராமன், சார்லஸ் டார் வின் ஆகியோரது முகமூடி களை மாணவர்களுக்கு வழங்கினார்.
புதுக்கோட்டை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், புதுக்கோட்டை வாசகர் பேரவைம் இணை ந்து புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடத்திய விழா விற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் பி.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். வாச கர் பேரவைத் தலைவர் சா. விஸ்வநாதன், அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ம.வீர முத்து, பள்ளியின் துணை முதல்வர் ஜி.செந்தில் உள் ளிட்டோர் சலந்துகொண்டனர்.