districts

img

“எனது குப்பை - எனது பொறுப்பு” மக்கள் இயக்க தொடக்க விழா

தஞ்சாவூர் மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட, மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உரங்களை, தனியாரிடம் விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையை தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாநகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை வழங்கியது. தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், “எனது குப்பை - எனது பொறுப்பு” மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடக்க விழாவில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர மேயர் சண்.ராமநாதன் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார்.