districts

img

எல்ஐசி முகவர்களுக்கு மாதந்தோறும் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க கோரிக்கை

கும்பகோணம், மே 13- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் (லிகாய்)  சங்கம் சார்பில் 4 ஆவது பேரவை கும்பகோ ணம் நகரத்தார் மண்டபத்தில் கிளைத் தலை வர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெய பால், மாவட்ட பொருளாளர் கண்ணன்,  கோட்ட பொது செயலாளர் கோபால கிருஷ்ணன், மாநில செயலாளர் ராஜா, சங்கர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். சங்க ஆண்டு அறிக்கையை சங்க செயலா ளர் குழந்தைவேல், வரவு-செலவு அறிக் கையை சங்க பொருளாளர் பார்த்திபன் படித்தனர்.  லிகாய் கும்பகோணம் கிளை 2-ன் புதிய  தலைவராக கே.தமிழ்ச்செல்வன், செயலாள ராக ஆர்.முத்துகிருஷ்ணன், பொருளாள ராக கே.சங்கர், துணைத் தலைவராக ஏ.ராஜ கோபால், துணை செயலாளராக என்.புனிதா  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை மாநாட்டில் கேரள மாநில அரசு எல்ஐசி முகவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி  வழங்கியது போல, அனைத்து மாநில எல்ஐசி முகவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.  பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். வைர விழா ஆண்டிற்கான உரிய பரிசு வழங்கிட வேண்டும்.  குறைந்தபட்ச கூலி சட்டத்தை அமல்படுத்தும் வகையில், எல்ஐசி முகவரிகளுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்கிட வேண்டும். நாடாளுமன்றத்தில் நிலுவையிலுள்ள லிகாய் தலைவர் டாக்டர் சம்பத், தனிநபர்  மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.