தஞ்சாவூர், ஜன.24- தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் உணவு பாது காப்பு துறையின் கீழ் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மக்கள் பயன் பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும் தரமான, கலப்படமற்ற, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கிய மான உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக நட மாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் 7 நாட்கள் தஞ்சை மாவட்டத்திற்குள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. நடமாடும் உணவு ஆய்வகம் நமது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் உள்ள உண வுப் பொருட்களின் தரம், அதில் கலப்படம் உள்ளதா என்பதை கண்ட றிந்து, அதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த நடமாடும் உணவு ஆய்வகத்தில் குடிநீர், பால், சமையல் எண்ணெய், பருப்பு வகை கள், இனிப்பு, கார உணவு வகைகள் மற்றும் இதர மளிகை பொருட்கள், உணவுப் பொருள்களின் தரத்தை உட னடியாக ஆய்வு செய்வதற்கு ஏற்ப ஸ்பாட் டெஸ்ட் உபகரணங்கள் வழங் கப்பட்டுள்ளன. அதில் கண்டறிந்த தரமற்ற உணவு மாதிரிகளின் தன்மையை உறுதி செய்ய சட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும். கலப்படம் அல்லது தரம் குறைவு எனக் கண்டறியப்படும் உணவு மாதிரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தரம் குறைந்த மற்றும் கலப்படம் உள்ள உணவுப் பொருட்கள், லேபிள் குறைபாடு உள்ள மற்றும் தடை செய் யப்பட்ட உணவு மாதிரிகள் மீது, தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 569 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ. 64,22,500 வருவாய் ஈட்டி தரப்பட்டுள் ளது” என்றார்.