தஞ்சாவூர், ஏப்.18 - தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் ஏப்.19 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தஞ்சை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி மாற்றுத்திற னாளிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஏப்ரல் 20 (புதன்கிழமை) காலை 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.