districts

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஓய்வூதியர் கோரிக்கை

தஞ்சாவூர், மே 27-  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 78 மாதமாக வழங்கப் படாமல் உள்ள அகவிலைப்படியை உடனே  வழங்க வேண்டும். விபத்தில் இறந்த தொழிலா ளரின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளாக வழங்கப் படாமல் உள்ள வாரிசு வேலையை வழங்க  வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் கோரிக்கைக்கு ஆதர வாக, தஞ்சை ரயிலடியில் ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபாலன் துவக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஆர்.தமிழ்மணி உள்ளிட் டோர் ஆதரித்துப் பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கக் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ் நிறை வுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.சுத்தானந்தன் நன்றி கூறினார்.

;