தஞ்சாவூர், செப். 20 - தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் தொழில் முனை வோர் பிரிவு மற்றும் உள்தர நிர்ணயப் பிரிவு சார்பில் ஒரு நாள் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவ னங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா முன்னிலை வகித் தார். ஆய்வியல் புலத் தலைவர் ஜி.அர்ச்சுனன் வாழ்த்திப் பேசி னார். தஞ்சாவூர் ஜெயம் நிறுவன மேலாண் இயக்குநர் எம். ராஜமகேஸ்வரி, கிங்ஸ் பொறியியல் கல்லூரி தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் கே.சுதாகர் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக வணிக மேலாண்மை உதவி பேராசிரியர் ரா.ஆறுமுகம் வரவேற்றார். வணிக மேலாண்மை இரண்டாம் ஆண்டு மாணவி ஜி.சந்தியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் செய்திருந்தார்.