districts

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 28-  சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட 13-ஆவது ஆண்டு பேரவை தஞ்சா வூரில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.வீரையன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் க.மதியழகன் வரவேற்றார். டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், சிஐடியு  மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, மாவட்டப் பொரு ளாளர் ம.கண்ணன் ஆகியோர் பேசினர். டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப் படுத்தி காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும். விற்பனை அடிப்படையில் சுழற்சி முறை பணியிட மாறுதல் கொள்கையை உரு வாக்கி வெளிப்படையான பணியிட மாறு தலை அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் குடியிருப்பு அருகில் உள்ள கடைகளுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு தொகையை காலதாமதம் இல்லா மல் உடனே வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்டோ சங்க நகர செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.