districts

நீட் தேர்வு பயிற்சி அரசுப் பள்ளிகளில் தொடரும்

தஞ்சாவூர், நவ.3 - நீட் தேர்வு ரத்து செய்யப்படும்  வரை அரசு பள்ளிகளில் அத்தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி தெரிவித்தார். 

தஞ்சாவூர் காந்திஜி சாலை யில் தனியார் துணிக்கடையை வெள்ளிக்கிழமையன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரைக்கும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகை யில் சிறப்பு பயிற்சி நடைபெறும். ஏனென்றால் அரசுப் பள்ளி மாணவர்களால் வெளியே தனி யாரிடம் ரூ. 2 லட்சம், ரூ. 3  லட்சம் செலுத்தி பயிற்சி பெற முடியாது. மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.  இது தொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை  என நீதிமன்றமே கூறியுள்ளது.  அரசு தங்களது கருத்துகளை  இதுபோன்று வெளிப்படுத்து வதில் தவறில்லை எனவும் நீதி மன்றம் சுட்டிக்காட்டி உள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்