புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
உலக மகளிர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி நகராட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு சார்பில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரா பானு ரெட்டி துவக்கி வைத்தார்.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கோட்டாட்சியர் ரவி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.