தஞ்சாவூர், ஏப்.1 - பேராவூரணியில் சாலை விரி வாக்கப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருவதை பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி பேரூராட்சியில், பட்டுக் கோட்டை சாலை முதல் அறந்தாங்கி சாலை, நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் வரையிலும், அதேபோல் ஆவணம் சாலையிலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி, மின்கம்பங்கள், மின்மாற்றிகளை இடம் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடை பெற்று வந்தன. சாலை அமைக்கும் பணி மட்டும் தாமதமாகி வந்த நிலையில், பொது மக்கள் வியாபாரிகள், வாகனங்கள் செல்லும் போது ஏற்படும், தூசுப்படலத்தால் அவதிப் பட்டு வந்தனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நகர வர்த்தகர் கழகம் மற்றும் சமூக நல அமைப்புகளின் சார்பில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சாலைப் பணி களை விரைந்து முடிக்குமாறு நெடுஞ்சா லைத் துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது பணிகள் வேகம் எடுத்துள்ளன. முதன்மைச் சாலையின் ஒருபுறம் தரை சமப்படுத்தப்பட்டு, தார்ச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் பட்டுக்கோட்டை சாலையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர், “நீல கண்டப் பிள்ளையார் கோயில் திருவிழா விரை வில் தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல், பணிகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்க வேண்டும்“ என உத்தரவிட்டார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சந்திரசேகர், உதவிப் பொறியாளர் அருண்குமார், சாலை ஆய்வாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.