districts

முத்தரப்புக் கூட்டத்தில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

தஞ்சாவூர், ஜன.14-  தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் அறு வடை இயந்திரங்களில் பெல்ட் வகைக்கு ரூ.2,350 என்றும், டயர் வகைக்கு ரூ.1,700 எனவும் முத்தரப்புக் கூட்டத்தில் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங் களுக்கு வாடகை நிர்ணயம் செய்வது தொடர் பான முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள், தனியார் நெல் அறு வடை இயந்திர உரிமையாளர்களின் கருத்து களைக் கேட்டறிந்தனர். இதன் அடிப்படை யில் பெல்ட் வகை இயந்திரத்துக்கான வாட கையாக மணிக்கு ரூ. 2,350 என்றும், டயர் வகை இயந்திரத்துக்கான வாடகையாக மணிக்கு ரூ. 1,700 எனவும் நிர்ணயம் செய் யப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், ‘‘நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத்  தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து, அறுவடை இயந்திர உரிமை யாளர்கள் இயந்திரங்களைப் பணியில் ஈடு படுத்த நல்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டால், கோட்டாட் சியர்கள், வட்டாட்சியர்கள், வேளாண் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும், ஆட்சியரகத்தில் இயங்கி வரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேளாண் பொறியியல் துறை தஞ்சாவூர் செயற் பொறியாளரை 90035 23343, தஞ்சாவூர்  உதவி செயற்பொறியாளரை 98428 62692, கும்பகோணம் உதவி செயற் பொறியாளரை 94436 78621, பட்டுக்கோட்டை உதவி செயற்  பொறியாளரை 99761 93110, தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை 94420  93161, தஞ்சாவூர் மோட்டார் வாகன ஆய்வா ளரை 94875 96121, கும்பகோணம் மோட்டார்  வாகன ஆய்வாளரை 93848 08368, பட்டுக் கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளரை 93848 08335 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு  புகார் அளிக்கலாம்’’ என்றார்.