கும்பகோணம், நவ.5- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தில் பயன்பெற உழவர் களுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்ப னந்தாள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலெட்சுமி கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு தொகை முழுமையாக கிடைக்கவில்லை என்ற கவலையில் விவசாயிகள் இருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக விவசாயி களுக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் முழுமையாக கிடைக்க வில்லை. 5 ஆண்டுகால சரா சரியை கணக்கிட்டு ஏற்க னவே இருந்த மகசூலைவிட இப்போது குறைவாக இருந்தால்தான் காப்பீட்டு தொகை கிடைக்கும் என்பது பொதுவான விதிமுறை. வேளாண்மைத் துறை மட்டு மின்றி புள்ளியியல் துறை, இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து தான் இத்தகைய மகசூல் கணக்கீட்டை மேற்கொள் கின்றன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் திருப்பனந்தாள் வட்டாரத்தில், நடப்பாண் டில் இயற்கை உரம் உற்பத்தி, தார்பலீன் விநியோ கம், வரப்பில் உளுந்து சாகு படிக்கு 50 சதவீத மானிய விலை, நீடித்த பசுமை போர்வை பராமரிப்பு மானி யம், சிங் சல்பேட் மற்றும் ஜிப்சம் விநியோகத்திற்கு ஏக்கருக்கு தலா ரூ.250 வழங்கப்படுகிறது. மேலும் பண்ணை கருவிகள், 5 அக்ரி கிளினிக் அமைக்க ரூ.1 லட்சம் வீதம் 10 எண்ணிக் கையில் வழங்கப்பட உள்ளது. திருப்பனந்தாள் வட்டா ரத்தில் உள்ள கோட்டூர், கட்டாநகரம், பந்தநல்லுார், குலசேகரநல்லுார், உக்கரை, கொண்டசமுத்தி ரம், திருமாந்துறை, நெய்வா சல், துகிலி, கஞ்சனுார், திட்டச்சேரி ஆகிய 11 கிராமங்கள் இத்திட்டங்க ளில் பயன்பெற தேர்வு செய் யப்பட்டுள்ளன” என்றார்.