தஞ்சாவூர், ஏப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமத்தில், கோணக்க டுங்கலார் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது; டெல்டா மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளன. இப்பணிகள் மே 31 ஆம் தேதிக்குள்ளாக முடிக்கப்பட்டு விடும். இந்த வாய்க்கால் ரூ.15.05 லட்சம் மதிப்பில் தூர்வாரப் பட உள்ளது. தூர்வாரும் பணிகள் மிக முக்கியமா னவை. கடந்த ஆண்டுகளை விட முதல்வர் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஆனால், வாய்க்கால்களில், ஆறுகளில் கழிவு நீர் கலப்பது, குப்பைகளை கொட்டுவது கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு தேவையாக உள்ளது. எந்த மாநி லத்திலும் இல்லாத சிறப்பாக விவசாயத் திற்கு என தமிழகத்தில் தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறிய கருத்துகளின் அடிப்ப டையில்தான் வேளாண் பட்ஜெட் அமைந் துள்ளது. கொரோனா ஊரடங்காக இருந்தா லும், பள்ளிகள் மூடுவது, திறப்பதாக இருந்தா லும், மருத்துவ துறை, மருத்துவ வல்லு நர்கள் குழுவினர் ஆகியோரிடம் கலந்து பேசி, அவர்கள் என்ன கருத்துகளை கூறுகி றார்களோ, அந்த அடிப்படையில்தான் முதல்வர் முடிவெடுப்பார். அதற்காக, பள்ளிக் கல்வித்துறை மட்டும் அல்ல, அனைத்து துறை களும் காத்துக்கொண்டு இருக்கிறோம்” என்றார். அரசு தலைமைக் கொறடா கோவி.செழி யன், சட்டமன்ற உறுப்பினர் திருவையாறு துரை.சந்திரசேகரன், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.