districts

img

பெரியார் நகரில் உயர் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்திடுக! மாதர் சங்கம் கோரிக்கை

பாபநாசம், ஜூன் 30-     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய மாதர் சங்க பேரவை  நடைபெற் றது. இதில், தஞ்சை மாவட் டத் தலைவர் கலைச் செல்வி பேசினார்.  பேரவையில் பாபநாசம் ஒன்றியத் தலைவராக செல்வமேரி, ஒன்றியச் செய லாளராக ஆர்.கஸ்தூரி, பொ ருளாளராக தேன்மொழி உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  இதில், பாபநாசம் குப்பை மேட்டில் பொதுக் கழிவறை, பெரியார் நக ரில் உயர் நிலை நீர் தேக்கத் தொட்டி, மிஷன் தெருவில் குப்பை கிடங்கை அகற்று தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;