தஞ்சாவூர், மார்ச்.17- காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக மாநில பாஜக அரசை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு துணை போகாமல், சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி யும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், டெல்டா பகுதிகளில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்துப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டப் பொரு ளாளர் எம்.பழனிஅய்யா, சிஐடியு கௌரவத் தலைவர் ஆர்.மனோகரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கோவிந்தராஜ், கே.முனியாண்டி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.சுரேஷ் குமார், என்.சிவகுரு, மாவட்டக்குழு உறுப் பினர்கள் என்.சரவணன், என்.குருசாமி, எம்.மாலதி, மாநகரச் செயலாளர் வடிவேலன், ஒன்றியச் செயலாளர்கள் பூதலூர் தெற்கு சி.பாஸ்கர், அம்மாபேட்டை நம்பிராஜன், விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் கே.தமிழரசன், மோ கன்தாஸ், சௌந்தரராஜன், பி.பாலசுப்ரமணி யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி
பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவ சாயிகள் சங்க பொறுப்பாளர் வீ.கருப்பையா தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் சி.ஆர்.சிதம்பரம், ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஏ.வி. குமாரசாமி, கோ.ராமசாமி, சம்பத், சித.திரு வேங்கடம், த.ஜேம்ஸ், எஸ்.ஜகுபர்அலி, நாகேந்திரன், துரை, சுப்பிரமணியன், நாகநா தன், கார்மேகம், முருகையன், கந்தசாமி மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.சிம்சன் தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் ஜி.வைரவன், மாவட்ட துணைச் செயலாளர் த.இராயர், இயற்கை விவசாயி அ.இராமலிங்கம், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சாமிநாதன் விளக்கிப் பேசினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், கதிரேசன், நகர செயலாளர் கோபு, மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், சிஐடியு பொறுப்பாளர் பாண்டியன், நகர குழு உறுப்பினர் கோதாவரி, ஒன்றிய குழு உறு ப்பினர் மதியழகன், விவசாய சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், தமிழ்மணி, கார்த்தி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
குடவாசலில் வி.பி. சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.ஜி. சேகர் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி கண்டன உரையாற்றினார். இதில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.லெட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏப்.கெரக்கோரியா, பேரூராட்சி உறுப்பினர் ஆர்.அமுதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.