தஞ்சாவூர், ஏப்.29 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மறைந்த ரெ.கோகிலம் அம்மாள் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு உறுப்பினர் ரெ.ஞானசூரியன் தாயார் ரெ.கோகிலம் அம்மாள் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி காலமானார். இதையொட்டி படத்திறப்பு நிகழ்ச்சி பட்டுக் கோட்டை சிவக்கொல்லை எஸ்.வி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக் கிழமை மாலை நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு, பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவி ஞர் மதுக்கூர் ராமலிங்கம் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீல மேகம், எஸ்.தமிழ்செல்வி, எம்.செல்வம், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, சிபிஐ முத்துப் பேட்டை நகரச் செயலாளர் மார்க்ஸ், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலை வர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, மெரீனா ஆறுமுகம், கட்சி ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மோரீஸ் அண்ணா துரை, முருக.சரவணன், சாமி நாதன், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். ஏற்பாடுகளை ரெ. ஞானசூரியன் மற்றும் குடும்பத் தினர் செய்திருந்தனர்.