districts

கடைமடைப் பகுதியில் முழு நேரமும் மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை

தஞ்சாவூர், ஏப்.20-  சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதியில் 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் கோடை சாகுபடி நடக்குமா என்ற தயக்கத்தில் விவசாயிகள் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் கடைமடை பகுதியில் சம்பா சாகுபடி செய்யும் பெரும்பாலான விவ சாயிகள் கோடை சாகுபடி செய்வது  வழக்கம்.

ஆனால் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்புவரை போதுமான மழையின்றி ஆழ்துளைக் கிணறு களில் நீர்மட்டம் குறைந்ததால் பெரும்பாலான விவசாயிகள் கோடை சாகுபடியை கைவிட்டனர். அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டு களாக முறையாக மேட்டூர் அணை மே மற்றும் ஜூன் மாதங்களில் திறக்கப்பட்டது. அதேசமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அள விற்கு மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி முழுமையாக நடை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு போதுமான அளவு மழையும் பெய்ய வில்லை.

கடைமடைக்கு மேட்டூர் அணை தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் சம்பா சாகுபடியும் முழு மையாக நடைபெறவில்லை. மேலும் இதுநாள் வரை கடைமடை பகுதியில் மழை இல்லை.  கோடை சாகுபடி செய்யும் ஆழ்துளைக் கிணறு வசதியுள்ள கடைமடை விவசாயிகள் 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைக்கும் என கோடை சாகுபடி செய்வதற்கு ஆவலோடு காத்திருந்தனர்.  

ஆனால் தற்போது கடைமடைப் பகுதியில் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் சுழற்சி முறை யில் 12 மணி நேரம் மட்டுமே மும் முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. தற்போது ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டமும் குறைந்து வரும் நிலை யில், சாகுபடிக்கு போதுமான மின்சா ரம் கிடைக்குமா என்ற கவலையில் கடைமடை விவசாயிகள் கோடை சாகுபடிக்கு தயக்கம் காட்டி வரு கின்றனர்.