districts

பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி வகுப்பு தொடக்க விழா

தஞ்சாவூர், பிப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஜேசிஐ கீரமங்க லம் - பேராவூரணி சென்ட்ரல் மற்றும் நாண்டி பவுன்டேஷன் மஹிந்திரா பிரைட் கிளாஸ் ரூம் இணைந்து நடத்தும், பெண்க ளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்பு தொடக்க விழா  ஜேசிஐ தலைவர் ஆர்.ஜெயலட்சுமி தலைமையில் நடை பெற்றது.  செயலாளர் எஸ்.மாதவன் வரவேற்றார். தன்னம்பிக்கை பயிற்சியாளர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி சிறப்பு ரையாற்றினார். திட்ட இயக்குநர் ஏ.சாம்வெஸ்லி கருத்து ரையாற்றினார். கணினி பயிற்சியாளர் மாரியப்பன் பயிற்சி  குறித்து பேசினார். நிறைவாக, பொருளாளர் கே.ராஜாராஜன்  நன்றி கூறினார்.  இதில், தேர்வு செய்யப்பட்ட 18 முதல் 35 வயது வரையி லான 70 பெண்களுக்கு பிப்.23 முதல் 27 ஆம் தேதி வரை, காலை  10 மணி முதல் மாலை 4 மணி வரை அடிப்படை கணினி பயிற்சி,  சுயமுன்னேற்ற பயிற்சி, மதிய உணவு, தேநீருடன் இலவச மாக அளிக்கப்படுகிறது.

;