தஞ்சாவூர், அக்.23- டெல்டா மாவட்டம் முழு வதும் காப்பீடு செய்த விவ சாயிகள் அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 22 விழுக்காடு ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூத லூர் நான்கு ரோட்டில் விவ சாயிகள் சங்க பூதலூர் தெற்கு ஒன்றியத் தலைவர் கெங்கைபாலு தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர், வி.ச. ஒன்றியச் செயலாளர் தமிழரசன், துணைச் செய லாளர் வின்சென்ட் ராஜா, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப் பினர்கள் சோலை.ரமேஷ், ராஜகோபால், தமிழ்ச்செல் வன், கிளைச் செயலாளர் கண் ணன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராம லிங்கம் மற்றும் விவசாயி கள் கலந்து கொண்டனர்.
குடவாசல்
வலங்கைமான் ஒன்றியத் தில் பயிர் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கக் கோரி சிபிஎம் மற்றும் சிபிஐ விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.சுப்ரமணியன் மற்றும் சிபிஐ விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம். கலியபெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.கலியபெருமாள், சிபிஎம் வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.ராதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.