கும்பகோணம், ஏப்.10- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், நாச்சியார்கோயில் லயன்ஸ் சங்கம், சிட்டி யூனியன் வங்கி, மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனை, தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் ஐஓஎல் (IOL) லென்ஸ் பொருத் தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாச்சியார்கோயில் கிரசண்ட் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் நாச்சியார் கோயில் மற்றும் அருகில் உள்ள கிராமத்திலிருந்தும் 267 பேர் தங்களின் கண்கள் மற்றும் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொண் டனர். இதில் 91 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில் நாச்சியார் கோவில் லயன் சங்க தலை வர் பழனிவேல், செயலாளர் செந்தில்குமார், பொருளா ளர் பாலமுருகன், கிரசண்ட் பள்ளி தாளாளர் கமாலுதீன், செயலாளர் முபாரக் அலி, மதுரை அரவிந்த் கண் மருத்து வமனை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் மற்றும் மருத்து வர்கள் கலந்து கொண்டனர்.