districts

img

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டணமில்லா கண் சிகிச்சை முகாம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டணமில்லா கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை அன்று (பிப்.5) கிண்டியில் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கமும், சங்கர நேத்ராலயா மருத்துவமனையும் இணைந்து இந்த முகாமை நடத்தின. டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்  துணைப் பொதுச் செயலாளர் கே.பி.ராமு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை, சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் தொடங்கி வைத்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், டாஸ்மாக் ஊழியர் சங்க தென்சென்னை  மாவட்டச் செயலாளர் வடிவேல், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசரவணன், வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.