பேராவூரணி, மார்ச் 29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஸ்ரீ விநாயகா திருமண மண்டபத்தில் லயன்ஸ் சங்கம், பாரத ஸ்டேட் வங்கி, ஸ்ரீ விநாயகா ஜூவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்து வமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து, இலவச கண் பரி சோதனை முகாம் நடைபெற்றது. லயன்ஸ் சங்கத் தலைவர் செ.ராம நாதன் தலைமை வகித்தார். செயலாளர் ரா.ஆதித்யன் வரவேற்றார். பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ஆர்.சூரியேந்திரன், விநாயகா குழும நிர்வாக இயக்குனர் இ.வீ. சந்திரமோகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி மருத்துவ தொடங்கி வைத்த னர். முகாமில், அரவிந்த் கண் மருத்துவ மனை மருத்துவர்கள் கலந்து கொண்டு நோயாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். இதில் 654 பேர் புறநோயாளிகளாக கலந்து கொண்ட னர். இவர்களில் 238 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மது ரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.