districts

img

கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் சம்மதம் : சாலை மறியல் ஒத்திவைப்பு

தஞ்சாவூர், மே 12- பூதலூர் தாலுகா அரசு மருத்துவ மனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும் பிரேத பரிசோதனைக் கூடமும், பிணவறையும் அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே 12 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் பிரேமா தலை மையில், புதனன்று மாலை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காவல்துறையினர், மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் (பொ) மோகன்ராஜ், கால்நடை உதவி மருத்துவர் கமலா நந்தன், வருவாய் ஆய்வாளர் முருகா னந்தம், கிராம நிர்வாக அலுவலர் முருகே சன் ஆகியோர் அரசுத் தரப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், மற்றும் ஜி.கண்ணன், எஸ்.ராம லிங்கம், முத்துக்குமார், பழனிச்சாமி, எம்.ஜி.சரவணன், பி.ராஜூ, கே. ராஜகோபால், ஆர்.கோவிந்தராஜன், கெங்கை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி
இதில், தற்போது மருத்துவ முதுநிலை தேர்வு மே 28 நடைபெறவுள்ளதால், அது முடிந்தவுடன் ஜூன் மாதம் முதல் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில், பூதலூர் அரசு மருத்துவமனையில் மருத்து வர்கள் நியமிக்கப்படுவார்கள்.  நிரந்தரமாக பிணவறை மற்றும் பிரேத பரிசோதனைக் கூடம் அமைக்கும் வரை தற்காலிக பிணவறை மற்றும் பிரேத பரிசோ தனைக் கூடம், பூதலூர் அரசு மருத்துவ மனையில் அமைத்திட மாவட்ட ஆட்சிய ரால் பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  கால்நடை மருத்துவர் நிரந்தரமாக பணிய மர்த்தப்படும் வரை, சானூரப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, சித்திரக்குடி, ரெட்டி பாளையம் ஆகிய கால்நடை மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு, பூதலூர் கால்நடை மருத்துவ மனை வாரம் முழுவதும் செயல்படும் வகை யில், கூடுதல் பொறுப்பில் மருத்துவர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.