தஞ்சாவூர், ஏப்.10- தஞ்சை விளார் சாலையில் உள்ள தில்லை நகர் லெனின் தெருவை சேர்ந்தவர் பிரதிபா. இவருடைய கணவர் பாலாஜி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரதிபா திங்கள்கிழமை தனது குழந்தையுடன் தஞ்சை மாவட்ட நீதி மன்றத்துக்கு வந்தார். பின்னர் அவர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டினிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘‘எனது கணவர் பாலாஜி, கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த தற்காக பட்டுக்கோட்டை காவல்துறை யால், கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த அவர் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் 30 நாட்கள் தினமும் கை யெழுத்திட்டு வந்தார். எனது கணவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
காவல்துறை தொல்லை
கடந்த 2 ஆண்டுகளாக பாலாஜி எந்த வித குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. இந்த நிலையில் கடந்த 4- ஆம் தேதி சிறப்பு காவல் படையினர் எனக்கூறி எங்கள் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் எந்த ஒரு காரணமும் இன்றி எனது கணவரை அனுப்பி வைக்கு மாறு கூறி என்னையும், குழந்தையும் தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளானோம். மேலும் தினமும் வீட்டிற்கு வந்து காவல்துறையினர் தொல்லை கொடுக்கிறார்கள். இதில் இருந்து எப்படி மீள்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே எனது குடும்பம் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.