districts

img

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி: லாரல் பள்ளி மாணவர்கள் சாதனை

தஞ்சாவூர், அக்.14 -  தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.  இந்தப் போட்டிகளில் பங்கு பெற்ற பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கைப்பந்துப் போட்டியில் மேலோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். மேலும், குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், மேலோருக்கான இறகுப்பந்து போட்டியில் முதலிடமும், மேலோருக்கான குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும் மற்றும் மேன்மேலோருக்கான எறிபந்து போட்டியில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார். பள்ளி முதல்வர் வி.பி.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் டி.ஆறுமுகம், உதவித் தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் சி.பாலசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

;