தஞ்சாவூர், நவ.24- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்புடன், ஆண்டுதோறும் நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாட்டிற்கு தேர்வு பெற்றுள்ள குழந்தை விஞ் ஞானிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டினார். நலவாழ்விற்கான சூழ லியலை அறிதல் என்னும் பொதுத் தலைப்பின்கீழ், இந்தியா முழுவதும் குழந்தை விஞ்ஞானிகள் மேற் கொண்டு வரும் ஆய்வின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 330 குழந்தை விஞ்ஞானிகள் கடந்த மூன்று மாதகாலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டி ருந்தனர். இவற்றில் சிறந்த ஆய்வு களாக தேர்வுபெற்ற 66 பேர், அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவரை சந்தித்து தங்களது ஆய்வு முடிவு களை விளக்கினர். வேளாண்மை, இயற்கை உணவு, ஆரோக்கியம், இயற்கை, சுற்றுச்சூழல், ஆற்றல் வளம், பாரம்பரிய அறிவு, அலையாத்திக் காடு கள் உள்ளிட்ட பல வகை யான ஆய்வுகளை மேற் கொண்ட குழந்தை விஞ்ஞா னிகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சிவகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் சுகுமாறன், ஊராட் சித் தலைவர் மஞ்சுளா உள் ளிட்டோர் பங்கேற்றனர். குழந்தை விஞ்ஞானிகள் டிசம்பர் 10, 11-ஆம் தேதி களில் தூத்துக்குடியில் நடை பெறும் மாநில அறிவியல் மாநாட்டிலும், டிசம்பர் இறுதி வாரம் குஜராத் மாநிலம் அக மதாபாத்தில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளனர்.