மெலட்டூர், நவ.24- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கொத் தங்குடி ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய வீடுகள் கட்டித் தர குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களம் தெற்கு தெரு வில் 28 வீடுகள், எடக்குடியில் ஆதி திராவிடத் தெருவில் 11 வீடுகள், குண்டூர் ஆதி திராவிடத் தெருவில் 13 வீடுகள், வெண்ணுக்குடி தோட்டத்தில் 2 வீடுகள் என வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து இடிந்து விழும் நிலை யில் உள்ளது. இதில் வசிப்பவர்கள் பயத்துடனே நாட் களை கடத்துகின்றனர். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் பழனி கூறுகை யில், ‘‘தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு, 30 வருடங்களுக்கு மேலாகின்றது. பழுதடைந்துள்ள இந்த தொகுப்பு வீடு களை இடித்து விட்டு புதிதாக வீடுகள் கட்டித் தர தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.