districts

img

பாதாளச் சாக்கடைப் பணியில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்; மாநகராட்சியில் பணி

தஞ்சாவூர், ஆக.7 -  தஞ்சாவூரில் பாதாளச் சாக்கடை உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஜெயநாராயண மூர்த்தி என்ற தொழிலாளி மரணமடைந் தார். மற்றொரு தொழிலாளி தேவ ராஜ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர் போராட்டம்

இந்நிலையில் தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டா மை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, பாதாளச் சாக்கடை பணியின் போது இறந்து போன ஜெயநாராயண மூர்த்தியின் குடும்பத்திற்கு உச்சநீதிமன்ற அறி வுறுத்தலின்படி ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; குடும்பத் திற்கு மறு வாழ்வு பணிகளை செய்து தர வேண்டும்; அதுவரை ஜெய நாராயணமூர்த்தி உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படாததால் புதன்கிழமை காலை யிலும் தொடர்ந்து போராட்டம் நடை பெற்றது. 

இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், இறந்து போன ஜெயநாராயண மூர்த்தியின் மனைவி சுகன்யா தனது இரண்டு  குழந்தைகளுடனும் குடும்பத்தின ருடன் பங்கேற்றார். 

பேச்சுவார்த்தை

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவரும், கந்தர்வகோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் ஆர்.கலைச்செல்வி, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், எஸ்.தமிழ்ச் செல்வி, தஞ்சை ஒன்றியச் செயலா ளர்  கே.அபிமன்னன், மாநகரச் செய லாளர் எம்.வடிவேலன்,  மாவட்டக் குழு உறுப்பினர் என். குருசாமி, இ.வசந்தி மற்றும் ஜெயநாராயண மூர்த்தியின் மனைவி சுகன்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அரசுத் தரப்பில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச் சந்திரன், மாநகர துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, தஞ்சை மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சிப் பொறியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 

இழப்பீடு வழங்க ஒப்புதல்

அப்போது, பணியில் அஜாக்கிர தையாக இருந்த மாநகராட்சி அலு வலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது; இதில் மேலும் கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்ப்பது எனவும்,  முதலமைச்சர் நிவாரண நிதி மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; மேலும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.20லட்சம்  ஜெயநாராயணமூர்த்தியின் குடும்பத்திற்கு மாநகராட்சி சார்பில் உடனடியாக வழங்கப்படும்; அவரது  மனைவி சுகன்யாவுக்கு மாநகராட்சி யில் உதவியாளர் பணியும், சகோதரி ஜெயபகவதிக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியும் வழங்குவதாக அலு வலர்கள் ஒப்புக்கொண்டனர். இதை யடுத்து போராட்டம் முடிவுக்குவந்தது. 

பணி ஆணை

சுகன்யா மற்றும் ஜெயபக வதிக்கு பணி ஆணையை போராட்டக் களத்திலேயே மாநகராட்சி ஆணை யர், காவல் துறை அலுவலர்கள், சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஜெயநாரா யண மூர்த்தியின் உடல் பெற்றுச் செல்லப்பட்டு இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது. 

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்   மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், கா.அருளரசன், என்.சரவணன், சிஐடியு மாவட்டத் தலைவர் மா.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் த.முருகேசன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் பேர்நீதி ஆழ்வார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சா.ஜீவபாரதி, கா.செந்தில்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப்  ராஜ்குமார், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட குழு உறுப்பினர்கள் வீ.கரிகாலன், பழ.அன்புமணி, எம்.சேகர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கு.சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்பட்டதோடு, வாழ்வாதாரத்திற்காக மாநக ராட்சியில் பணியும் பெற்று தரப் பட்டுள்ளது. இது பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த வரின் குடும்பத்தினருக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.