தஞ்சாவூர், பிப்.8 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து, ஒரே நாளில் ஆயி ரக்கணக்கானோரின் விபரங்கள் நடமாடும் டிஜிட்டல் பேருந்து மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை சார்பில், கொரோனாத் தொற்றை கட்டுப்ப டுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் பொது மக்கள், முன் களப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் அரசின் கோவின் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படு கிறது. இதற்காக டிஜிட்டல் பேருந்து வசதியை கடந்த மாதம் தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று, அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவ அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி தன்னார்வலர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அழகிய நாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் மற்றும் மருத்துவ அலுவலர்கள் வழிகாட்டுத லின்படி தன்னார்வலர் மல்லிப்பட்டினம் நூருல்அமீன், பேராவூரணி நீலகண்டன் மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து விவரங்களை யும் கணினியில் பதிவேற்றம் செய்தனர். அப்போது சுமார் 1,200 பேரின் விபரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.