districts

கரும்பு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க ஓய்வூதியர்களுக்கு அனுமதி மறுப்பு போராட்டத்தை ஒடுக்குவதா? : ஓய்வூதியர்கள் கண்டனம்

கும்பகோணம், ஜன.2- தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருமண்டங் குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொள்முதல் செய்ததற்கு விவசாயிகளுக்கு  சுமார் ரூ.300 கோடி நிலுவை தொகை வழங்க வேண்டும். வங்கி நிர்வாகமும் ஆலை நிர்வாகமும்  இணைந்து விவசாயிகளுக்கு தெரி யாமல் வங்கிகளில் போலியாக கடன் பெற்றதை திரும்ப செலுத்த வேண்டும் எனக் கோரி கடந்த  2022 நவம்பர் 30-ஆம் தேதி முதல்  தொடர் காத்திருப்பு போராட்டத்தை கரும்பு விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  தமிழ்நாடு விவசாய சங்கங்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து வருகின்றன. இந்நிலையில் கும்பகோணம் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க, கும்பகோணம் வட் டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஓய்வூதியர்கள் செல்ல இருந்தனர்.
அனுமதி மறுப்பு
இதனையடுத்து போராட்டத்  தில் கலந்து கொள்ளும் அனைத் துத் துறை ஓய்வூதியர்களுக்கும் கிழக்கு காவல் நிலைய ஆய்வா ளர் செயல்முறை ஆணை அனுப்பி யுள்ளார். அதில், ‘‘திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை  முன்பு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் நடக்கும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓய்வூதியர்கள் சார்பாக இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்வதாக வாட்ஸ் அப் மற்றும் வலைதளங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.  தங்களுடைய பேரணி செல்லும் பாதையானது பேருந்துகள் செல்  லும் வழித்தடம் ஆகும். இதனால்,  பொதுமக்களுக்கும், போக்குவரத் துக்கும் இடையூறு ஏற்படும். தற்  போது கும்பகோணம் மாநகரத்தில் 30(2) காவல் சட்டம் அமலில் இருப்ப தால், பேரணியாக செல்ல அனுமதி  மறுக்கப்படுகிறது’’ என தெரிவிக் கப்பட்டுள்ளது
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதா? 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ராஜகோபாலன் தெரிவித்த தாவது:  திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு போராட்டம் நடத்தி வரும்  கரும்பு விவசாயிகளின் நியாய மான கோரிக்கையை நிறைவேற்றா மல், ஓய்வூதியர்கள் பேரணி செல்வ தாக வாட்ஸ் அப்பில் வந்த தவ றான தகவலை காரணம் காட்டி அவர்களுக்கு ஆதரவு தர இருந்த  எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது.  இது கரும்பு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி.  எனவே, உடனடியாக சம்பந்தப் பட்ட அதிகாரிகள், உயர்மட்ட குழு வினர் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைப்ப தற்கு ஓய்வூதியர் சங்கம் கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.