பட்டுக்கோட்டை, டிச.21- சொத்துவரி செலுத்தா தோர் இல்லத்திற்கு பட்டுக் கோட்டை நகராட்சி ஆணை யர் சௌந்தரராஜன், அதி காரிகளுடன் நேரில் சென்று வரி செலுத்தக் கோரி துண் டுப் பிரசுரங்கள் வழங்கி வரு வது நல்ல வரவேற்பை பெற் றுள்ளது. மேலும், புதிய வரி விதிப்புகளுக்கு அளவீடு செய்து வரிவிதிப்பும் செய் யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட் டுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள் ளன. 2022-23 ஆம் ஆண்டிற் கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத்தகை இனங் கள் மற்றும் தொழில் உரி மக் கட்டணம் ஆகியவற்றின் முந்தைய நிலுவைத் தொகை மற்றும் நடப்பாண்டு நிலு வைத் தொகை என மொத்தம் 11.02 கோடி ரூபாய் பொதுமக் களால் நகராட்சிக்கு செலுத் தப்பட வேண்டியுள்ளது. இத னால் பட்டுக்கோட்டை நக ராட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் வரி பாக்கி செலுத்தாதோர் வீடுகள், நிறுவனங்களுக்கு நேரில் சென்று வரி பாக்கி யை செலுத்தி, நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு உத வுமாறு கோரி துண்டுப் பிர சுரம் வழங்கி வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. மேலும், வரி செலுத்த வேண்டும் என்ற அக்கறை யை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் கூறுகையில், “பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து நகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, குடிநீர் கட் டணங்கள், குத்தகை இனங் கள் மற்றும் பிற இன வரி களை செலுத்த வேண்டும். பிற நகராட்சிகளுக்கு முன் மாதிரி நகராட்சியாக, வள ரும் நகராட்சியாக, வளர்ந்த நகராட்சியாக உருவாக்க ஒத் துழைப்பு அளிக்க வேண் டும். சொத்து வரி செலுத்து வதில் பொதுமக்களுக்கு ஏதே னும் காலதாமதம் மற்றும் பெயர், கதவு இலக்கங்கள், தெரு பெயர்கள் திருத்தம் மேற்கொள்ள உதவி தேவைப் படுவோர், ஆணையரை நேரில் அணுகி சரி செய்து கொள்ளலாம். ஆணையர் தொலைபேசி எண்.73973 96238. மேலும், இரண்டு நாட்க ளில் 78 வீடுகள், கடைகள் என அளவீடு செய்து வரி விதிப்பு செய்யப்பட்டது” என் றார்.