districts

img

டெல்டா மாவட்டங்களில் முழுமையான தொல்லியல் ஆய்வுகள் தேவை

தஞ்சாவூர், மார்ச் 5-  டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை, வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, ‘சிந்து முதல் பொருநை வரை’ என்ற மாநில அளவிலான கருத்தரங்கத்தில் பங்கேற்ற  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது:

டெல்டா மாவட்டங்களில் அகழ்வாரா ய்ச்சி செய்யப்படுகிறது. ஆனால் இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து இயங்கி வரும் இடமாக இருப்ப தால், இங்கு தொல்லியல் எச்சங்களைக் கண்டறிவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

வல்லம், ஆம்பல் போன்ற இடங்கள் அகழாய்வுக்காகத் தோண்டப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இதன் மூலம் சிறந்த ஆதாரங்களைக் கண்டு பிடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நெற்களஞ்சியமாகத் திகழும் இப்பகுதியில் சிறந்த நாகரிகம் தோன்றியதற்கான ஆதா ரங்களை கண்டறிய, இன்னும் முழுமை யான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு சிறந்த முயற்சியை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.கருணானந்தன் உரையாற்றினார்.  கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் அ.ஜான் பீட்டர் தலைமை வகித்தார். வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கப் புரவலர் கு.ராமகிருட்டிணன் வாழ்த்துரையாற்றினார். அகழ்வாராய்ச்சி குறித்த கண்காட்சியை முனைவர் சோம சுந்தரம் திறந்து வைத்தார்.