கும்பகோணம், மார்ச் 14- கோயில் நிலத்தில் குடி யிருப்போர் மார்ச் 18 அன்று சென்னையில் நடத்தும் மாபெரும் முற்றுகை போராட் டத்தில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியி லிருந்து ஏராளமானோர் பங்கேற்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்க மாவட்ட அமைப் பாளர் சா.ஜீவபாரதி தெரி வித்ததாவது: தமிழ்நாடு முழுவதும் கோயில் இடங்களில் நீண்ட காலமாக குடியிருப்பவர்கள், விவசாய நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு கடை வைத்திருப்பவர்களுக்கு வாடகை மற்றும் குத்தகை நிர்ணயிக்கிறோம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை அறிவிக்கப்பட்டது. பயனாளிகள் கட்ட முடியாத அளவிற்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்திட வேண்டும் என பல போ ராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு பரம்பரையாக கோயில் நிலங்களை பயன்படுத்தி வரும் பயனாளிகளை, புதிய சட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்த முடி வெடுத்துள்ளது. மேலும் தஞ்சை முதல் விக்கிரபாண்டி யம் வரை சாலை விரி வாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினால் காலங்காலமாக குடியிருந்து வரும் ஏழை தொழிலா ளர்கள் மற்றும் கடை வைத்தி ருப்போரை அதிரடியாக அப்புறப்படுத்தி சாலைகள் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் அப்புறப்படுத் தப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்காமல், கோயில் மற்றும் மடத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங் கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கோயில்-மடம் இடத்தில் குடியிருப்போர் மத்தியில் பெருத்த நஷ்டத்தை ஏற்ப டுத்தி உள்ளது. ஆகை யால் உடனடியாக கோயில்- மடம் இடத்தில் குடியிருந்த வர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நீண்ட காலமாக கோயில் இடங்களில் குடியிருக்கும், குத்தகை சாகுபடி செய்யும் சாதாரண ஏழை-எளிய பய னாளிகளை அச்சுறுத்தும் அற நிலையத்துறையின் நடவ டிக்கையை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத் தில் மார்ச் 18 (வெள்ளிக் கிழமை) இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதில் திருப்பனந் தாள் பகுதியில் உள்ள கோயில் இடங்களில் குடியி ருப்பவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள முடிவெடுக் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.